ஆட்டு கொட்டிலில் தேங்காய் நார்:

BY: மரு டூலிட்டில்

A farmer used coir pith as a floor material for a goat farm and he got a good nitrogen rich urine based manure also . I ve narrated it .//ஆட்டின் கழிவில் இருந்து வெளியேறும் அம்மோனியா வாயு அதன் வளர்ச்சியை பாதிக்கிறது . அதற்கு தீர்வாக கால்நடை மருத்துவர்கள் கொட்டில் முறையில் ஆடு வளர்க்க பரிந்துரைத்தனர் .கொட்டில் முறையில் கழிவுகள் கீழே விழுந்து விடுவதாலும் நல்ல காற்றோட்டதினாலும் ஆடுகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது .


ஆடுகளுக்கு தீவனம் அங்கேயே இடப்படுவதாலும் மேலும் மேய்ச்சளினால் அலைவது குறைவாக உள்ளதாலும் எடை அதிகரிக்கிறது .

ஆனால் கொட்டில் முறை வளர்ப்பில் நிறைய முதலீடு தேவை .
ஒரு விவசாயி பின்பற்றிய ஒரு வழிமுறையை முன் வைக்கிறேன் ( இதில் சில demerits உள்ளது , அதற்கான தீர்வையும் பார்க்கலாம் )
……………………
1)coir pith ( தேங்காய் நாரின் மிச்சம் ) நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

2) எளிதான ஒரு கூரை கொட்டிலை அமைத்துக்கொள்ளுங்கள் .

3) அதன் தரையில் coir பித்தை பரப்பி விடுங்கள்

4)அதில் ஆடுகளை வளருங்கள்

-- coir pith ஈரத்தை உறுஞ்சி விடும் , சில நாட்களுக்கு ஒரு அதை முறை புரட்டி போடுங்கள் .

--முழுதும் ஈரமாகி விட்டால் கூரை கொட்டிலை பிரித்து அருகில் காய்ந்த நிலத்தில் கொட்டாயிட்டு அதில் புது coir pith ஐ பரப்பி ஆடுகளை விடுங்கள் .

-- அது முழுதும் நனைந்த பிறகு பழைய இடம் காய்ந்து இருக்கும் , அதில் கொட்டிலை இடுங்கள்
இந்த முறையின் பயன்கள் :

1)முதலீடு குறைவு

2)இந்த முறையிலும் ஆட்டு மூத்திரம் முழுதும் உறிஞ்ச பட்டு விடும்

3) ஆட்டு மூத்திரம் மற்றும் புழுக்கை கலந்த coir பித் முதல் தர உரம் , அதிக விலை போகும்

இந்த முறையில் வளர்க்க படும் ஆடுகள் மெத்தென இருக்கும் தேங்காய் நார்களின் மேல் நடப்பதால் குழம்புகள் வளைந்து காணப்படுகின்றது , எனவே அவற்றை சில மணி நேரங்களாவது மேய்ச்சலுக்கு இட்டு செல்லலாம்

Comments